ஈரோட்டில் இந்து கோவிலில் இஸ்லாமியரின் சிலை அமைப்பு : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் பொதுமக்களின் நெகிழ்ச்சி சம்பவம்
May 19 2022 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவரின் திருவுருவ சிலையை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் எல்லகடை அருகே அமைந்துள்ளது ராவுத்தர் குமாரசாமி திருக்கோயில். பல ஆண்டுகளுக்கு முன்பு மூலனூர் அருகேயுள்ள கன்னிவாடி பகுதியில் இருந்த ராவுத்தர் என்ற இஸ்லாமியர் ஒருவர் மக்களை பாதுகாப்பது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாக கூறப்படுகிறது. அதற்கு நன்றிக்கடனாக கன்னிவாடி பகுதியில் வசித்து வந்த மக்கள் கோயில் ஒன்றை அமைத்து அதன் நுழைவு வாயிலில் ராவுத்தரை சிலையாக வைத்துள்ளனர். மேலும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவின் போது புத்துமண் மூலம் ராவுத்தர் உருவம் செய்து அதை அனைத்து பொதுமக்களும் வழங்கி ராவுத்தருக்கு நன்றி கடன் செலுத்தி வருகின்றனர்.