மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் 21-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
May 19 2022 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை இரயில் தினசரி ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளை கடந்த மலை ரயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கோடைகால சிறப்பு வாராந்திர இரயிலை இயக்க உள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 21-ம் தேதி முதல் ஜூலை மாதம் 22-ம் தேதி வரை 2 மாதங்களுக்கு வாரம் ஒருமுறை மட்டும் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.