பேரறிவாளன் வழக்கில் ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கும் நீதிமன்றம் எதிராக கருத்து சொன்னதா? : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
May 19 2022 7:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரறிவாளன் வழக்கில், ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கும் நீதிமன்றம் எதிராக கருத்து சொன்னதா? என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி மாநில தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா, காரைக்காலில் உள்ள NIT வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் விடுதலை குறித்த நீதிமன்ற உத்தரவை தான் முழுவதுமாக படிக்கவில்லை என்றும், அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கும் நீதிமன்றம் எதிராக கருத்து சொன்னதா? - பிரச்னைக்குரிய மாநில ஆளுநர்களுக்கு மட்டும் கருத்து சொன்னதா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.