புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அரசு அலுவலகங்கள் அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவு
May 18 2022 7:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு அலுவலகங்கள் அருகே, மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கந்தர்வகோட்டை பகுதியில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில், அரசு நடுநிலைப்பள்ளி, வேளாண்மை அலுவலகம், தீயணைப்பு நிலையம், தொடக்க கல்வி அலுவலகம், கிராம நிர்வாக சார்நிலை கருவூலம், பெருமாள் கோவில் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு மையப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குப்பைகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.