திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோடை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
May 18 2022 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோடை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மற்றும் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக கத்தறி, வெண்டை, அவரை முதலான காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் பருத்தி சாகுபடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மனவேததனை அடைந்துள்ளனர்.
அதேப் போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பெய்து வரும் மழையால், முக்கிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், தண்ணீர் பஞ்சம் நீங்கியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.