ராமநாதபுரம்: கீழக்கரையில் பலத்த சூறைக்காற்றில் விசைப்படகு கடலில் மூழ்கி சேதம்
May 18 2022 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், பலத்த சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு ஒன்று முழுமையாக கடலில் மூழ்கி சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கீழக்கரை, பண்ணாட்டார் தெரு கடற்கரையில், முத்துப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி டைசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பலத்த சூறைக்காற்று காரணமாக விசைப்படகு முழுமையாக கடலில் மூழ்கி சேதமடைந்தது.
இதேபோல், மீனவர் குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகு, பலத்த சூறைக்காற்று காரணமாக முழுமையாக சேதமடைந்ததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.