பேரறிவாளன் விடுதலையால் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி - ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கியும், ஆனந்த கண்ணீர் வடித்தும் மகிழ்ச்சி பெருக்கு
May 18 2022 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தகவலை அறிந்து திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் இல்லத்தில்
ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பேரறிவாளன் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.