அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியின் தந்தையார் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
Jan 23 2022 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியின் தந்தையார் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி வடக்குப் பகுதி 2வது வட்டக் கழகச் செயலாளர் திரு. S. வெங்கடேசனின் தந்தை திரு. L. சுப்பிரமணி இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்தார்.
சுப்பிரமணியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.