கொரோனா பரவலால் தமிழகம் முழுவதும் இன்று, முழு ஊரடங்கு அமல் : வழக்‍கமான செயலியில் முன்பதிவு செய்யப்படும் ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்‍கு அனுமதி

Jan 23 2022 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக்‍ கட்டுப்படுத்தும் நடவடிக்‍கையாக, மாநிலம் முழுவதும் இன்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வழக்‍கமாக செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் ஆட்டோக்‍கள், கார்களுக்‍கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக்‍ கட்டுப்படுத்த, வரும் 31-ம் தேதி வரை, இரவு நேர ஊரடங்குடன் சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மேலும், கடந்த 9-ம் தேதியிலிருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 3-வது வாரமாக, இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு நாளில், கடந்த 9 மற்றும் 16ம் தேதிகளில் கடைபிடிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், அத்தியாவசிய செயல்பாடுகளுக்‍கு அனுமதி அளிக்‍கப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, இயக்கப்படுகிறது - மேலும் வாடகை கார்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00