ஏரிகள் நிரம்பின - வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
Dec 5 2021 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிபட்டி ஏரி முழுமையாக நிரம்பியது. வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வருவதால் இரண்டு கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஓமலூர் வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.