வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் மஞ்சூர் கண்மாயில் நீர் இல்லை - விவசாயிகள் புகார்
Dec 5 2021 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஆனால், மஞ்சூர் கண்மாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.