மாண்புமிகு அம்மா நினைவிடத்தில், புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் உறுதிமொழி ஏற்பு - ஒன்றிணைவோம் - வென்று காட்டுவோம் என கழகத்தினர் உறுதிமொழி ஏற்றனர்
Dec 5 2021 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் உள்ள மாண்புமிகு அம்மா நினைவிடத்தில், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. விரைவில் கழக ஆட்சி அமைய சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தமிழக மக்களின் நலனுக்காகவும், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், உயிர்த் தொண்டர்களின் உயர்வுக்காகவும், ஒன்றிணைவோம் எனவும் தொண்டர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தினர் உறுதிமொழி ஏற்றனர். விரைவில் கழக ஆட்சி அமைய சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் - வென்று காட்டுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஓர் அணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து, வரும் தேர்தல்கள் அனைத்திலும், நம் எதிரிகளை வென்று வீறுநடை போட வேண்டும் என்றும், நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும் என்றும் தொண்டர்கள் உறுதி ஏற்றனர்.
இதைத்தொடர்ந்து, அம்மா நினைவிடத்தில், புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தினர், மவுன அஞ்சலி செலுத்தினர்.