அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைது
Dec 5 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ரயில் நிலைய அதிகாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அங்குள்ள ஓட்டக்கோவில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரான சாகர் நாஹக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுப்புராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பெற்றோரிடம் கூறியிருந்தார். இதுதொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சாகர் நாஹக்கை கைது செய்தனர்.