பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் : பல்வேறு இடங்களில் தீவிர சோதனை
Dec 5 2021 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.