கனமழை எதிரொலியால் பூக்‍கள் விலை கடும் உயர்வு - மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையில் மல்லிகை ஒரு கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை

Dec 5 2021 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனமழை எதிரொலியாக மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையில், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகை, ஒரு கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர் மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில், நேற்று வரை கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, இன்று 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ, இன்று கிலோ 800 ரூபாய்க்கும்- 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ, 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி, செண்டு, செவ்வந்தி, சம்பங்கி, மரிக்கொழுந்து என அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மழை காரணமாக கனகாம்பரம் பூவின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், கனகாம்பரம் வரத்து முற்றிலும் இல்லை. கனமழை காரணமாக வரத்து குறைந்ததாலும், எதிர்வரும் முகூர்த்த நாட்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00