சென்னை தாம்பரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அழைத்து வரப்பட்ட இளம்பெண் தற்கொலை : கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

Dec 5 2021 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தாம்பரம் அருகே, பிறந்த குழந்தையை பார்த்து கொள்வதற்காக வேலைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்‍குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, பெருமாள் என்பவர், தனது இளைய மகளான சேர்மகனியை, தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில், எலக்‍ட்ரிக்‍கல் கடை நடத்தி வரும் முத்தையாவின் குழந்தையை பார்த்துக்‍கொள்வதற்காக, சிட்லப்பாக்கம் கோமதிநகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். முத்தையா தனது கடையில் பணியாற்றும் பெண்களுக்கென தனியாக அறை எடுத்து தங்க வைத்துள்ள நிலையில், சேர்மகனியையும் அங்கேயே தங்கவைத்தார். கடந்த 2 நாட்களாக சேர்மகனி, உணவு உட்கொள்ளாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக்‍ கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென அவர் தூக்‍கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் சக பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடலை போலீசார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து முத்தையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00