தூத்துக்குடியில் பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள் - உற்பத்தி தொடங்க பல மாதங்கள் ஆகும் என தொழிலாளர்கள் வேதனை
Dec 5 2021 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. உற்பத்தியை மீண்டும் தொடங்க பல மாதங்கள் ஆகும் என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. உப்பளங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால், உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீரை அகற்றிவிட்டு ஜனவரி மாதத்திலிருந்து உற்பத்தியைத் தொடங்க தொழிலாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இரைக்கப்படும் தண்ணீர் மீண்டும் உப்பளங்களுக்கே வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.