புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் - மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் அஞ்சலி செலுத்துகிறார்
Dec 5 2021 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சின்னம்மா மெரினாவில் உள்ள புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில், இன்று தொண்டர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மாவை தங்களது முன்மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்களும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், ஜாதி, மதப்பேதமின்றி கட்சிப்பாகுப்பாடு இல்லாமல் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஓர் அணியில் நின்று, ஓற்றுமையாக இணைந்து, அனைவரும் முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.