கடைசி விவசாயி படக்குழு மீது இளையராஜா புகார் : அனுமதி பெறாமல் தனது இசையை நீக்கியது தவறு என குற்றச்சாட்டு
Dec 3 2021 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் கடைசி விவசாயி படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் தெரிவித்துள்ளார்.
காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துள்ளனர். இது பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியானபோது தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தனது அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.