கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு : இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Dec 3 2021 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலில் நிலவும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து கடும் மேகமூட்டமும் பனிச்சாரலும் நிலவி ரம்மியமான சூழல் காணப்படுகிறது. அதிக குளிர் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு நிலவிவதால், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல வாரங்களாக கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள், பாறைகள் விழுந்து போக்குவரத்து முடங்கி வியாபாரம் பாதிக்கப்பட்ட சூழலில், தற்போது கடும் பனிமூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.