அம்மா உணவகத்தை முடக்க ஆட்குறைப்பு செய்யும் திமுக அரசு - அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

Oct 19 2021 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என கூறி வரும் திமுக அரசு, இத்திட்டத்தை முடக்கும் முயற்சியாக, ஆட்குறைப்பு செய்வதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க வேண்டுமென, கடந்த 2013-ம் ஆண்டு மாண்புமிகு அம்மாவால் தொடங்கப்பட்ட "அம்மா உணவகம்", பல மாநிலங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 207 அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடனே, சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டது. அம்மா உணவகம் திட்டம் மாற்றப்படாது என தி.மு.க. அரசு வெளிப்படையாக கூறினாலும், மறைமுகமாக இத்திட்டத்தினை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அம்மா உணவகத்திற்கு தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலய வாசலில் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00