திருப்பூர்: சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்
Oct 19 2021 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை மற்றும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி போடப்பட்டிருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. மீண்டும் சாலையோரத்தில் கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியிலேயும், திருப்பூர் பல்லடம் சாலையோரத்திலும் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர்.