சிவகங்கை: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - இளம்பெண் உயிரிழப்பு
Oct 19 2021 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அரசு மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வி என்ற இளம்பெண், மயக்க ஊசி செலுத்தியபோது உயிரிழந்தார். இதனால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் இன்று காலை புதுவயல் மேட்டுக்கடை அருகே சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இறந்த பெண்ணிற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாகவும் உடல்கூறு ஆய்வுக்குப் பின் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.