மணப்பாறை: ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
Oct 19 2021 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அஞ்சலிகளம் அருகே உள்ள மாமுண்டி ஆற்றில் திருட்டுத்தனமாக டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை காவல்துறையினருக்கு அளித்தனர். மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் டிராக்டரரை எடுத்துச் செல்ல முயன்றபோது வண்டி மணலில் சிக்கிக் கொண்டது. எனவே, ட்ராக்டரை அங்கேயே போட்டுவிட்டு மணல் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். டிராக்டர் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.