திருவெறும்பூர் ரயில்வே பிளாட்பார்மில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் உடல் மீட்பு
Oct 19 2021 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி திருவெறும்பூர் ரயில்நிலைய பிளாட்பார்மில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார். இதைப்பார்த்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக திருவெறும்பூர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அடையாளம் தெரியாத அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், கொலையா? தற்கொலையா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.