புலன் விசாரணையில் குறைபாடு - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
Oct 19 2021 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான எர்லம் பெரைரா என்ற ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, போலீசார் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. நான்கு வயது சிறுமி, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், எர்லம் பெரைரா குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பதாகக்கூறி, விடுதலை உத்தரவை ரத்து செய்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.