பெரம்பலூர்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Oct 19 2021 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் சார்பில், மாவட்டத்திலுள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலத்தின் மூலமாக தாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.