தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக மோதல் : சிறு விசைப்படகு மீனவர்களின் வலைகளை கிழித்தெறிந்து அராஜகம்
Oct 19 2021 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில், சிறு விசைப்படகு மீனவர்களின் வலைகளை கிழித்தெறிந்து, தடை செய்யப்பட்ட அதிவேக எஞ்சின் படகுகளைப் பயன்படுத்தி, மற்றொரு கிராம மீனவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகள், அதிவேக எஞ்சின்கள் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் கடந்த சில வாரங்களாக அமைதி நிலவியது.
இந்நிலையில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்களின் வலைகளை கிழித்தெறிந்து பூம்புகார் மீனவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிறு படகில் இருந்த மீனவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலைகளை பூம்புகார் விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்தியதால், நாகை மீனவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் மீனவ கிராமங்களில் பரபரப்பு நிலவுகிறது.