புதுக்கோட்டை அருகே ஆற்று மணலில் புதைத்து வைத்த 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Oct 19 2021 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், மதுவிலக்கு சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருமணஞ்சேரி அக்னி ஆற்றின் கரையில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.