மிலாது நபி விழா கொண்டாட்டம் : மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று பாட்டுப்பாடி, நடனமாடி உற்சாகம்
Oct 19 2021 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மிலாது நபி விழாவையொட்டி, கோவை உக்கடம் பகுதியில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று பாட்டுப்பாடியும், நடனமாடியும் சிறப்பாகக் கொண்டாடினர்.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில், அரபு பாடசாலையான மதரசாக்களில், புனித குரான் பயின்று வரும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பாட்டுப்பாடியும், நடனமாடியும் மிலாது நபியை உற்சாகமாகக் கொண்டாடினர். செல்லும் இடங்களில் பொதுமக்கள் வரவேற்று, பரிசுப் பொருட்களை வழங்கினர்.
ஏழை-எளியோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதேபோல், கோவையின் பல இடங்களிலும் மிலாது நபி கொண்டாடப்பட்டது.