சர்வதேச விபத்து காய தினத்தை முன்னிட்டு முதல் உதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Oct 19 2021 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச விபத்து காய தினத்தை முன்னிட்டு முதல் உதவி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி அரசு கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல் விளக்கம் நடைபெற்றது. முதலுதவி சிகிச்சை குறித்தும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள் முதல் உதவி வழங்குவது குறித்து உறுதிமொழியை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.