தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஒருநபர் ஆணையத்திற்கு இதுவரை நான்கேகால் கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ. சட்டம் மூலம் வெளியான தகவல்

Oct 19 2021 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையத்திற்கு இதுவரை 4 கோடி ரூபாய்க்‍கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்‍கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டத்தில், போலீசார் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்‍கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 30 கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது.

இதனிடையே, இந்த ஆணையத்திற்கு விசாரணைக்காக இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதுவரை 4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்​தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00