கோவை மாவட்டம் தொடர் மழையால் ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
Oct 19 2021 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தொடர் மழையால் ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழைநீரே, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அருகே உள்ள குரங்கு அருவி வழியாகச் சென்று, ஆழியார் அணையில் கலக்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ, பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களாக அருவியில் வெள்ளம் காரணமாக, பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.