திண்டுக்கல் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நெல் நடவுப் பணிகள் தீவிரம் - நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Oct 19 2021 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் பலரும் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள கொலக்காரன்பட்டியில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் இந்த பருவத்திற்கான முதல் நெல் சாகுபடிக்கு ஏதுவாக உழவு பணியில் ஈடுபட்டனர். நாற்றுகள் நன்கு விளைந்திருப்பதையடுத்து அவற்றை பறித்து நடவு செய்யும் பணியிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.