சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு
Oct 19 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றமும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வீட்டு வசதி கழகத்தின் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால் ஆகியோர் தங்கள் துறையில் தொடருவார்கள் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.