தமிழகத்தில் 14 ஆயிரத்து 570 பேருக்கு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை - இதுவரை 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
Oct 19 2021 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரத்து 200-க்கும் கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 570 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் சூழலில், ஆயிரத்து 423 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
சென்னையில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 774 பேர், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 166 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
கோவையில் ஒரேநாளில் 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 528 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 154 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
ஈரோட்டில் 88 பேருக்கும், செங்கல்பட்டில் 87 பேருக்கும், திருப்பூரில் 72 பேருக்கும், தஞ்சையில் 61 பேருக்கும், சேலத்தில் 55 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.