முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை - பழிவாங்கும் நடவடிக்கை அல்ல : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்
Oct 19 2021 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலேயே குற்றச்சாட்டுகள் வந்திருப்பதால், தற்போது நடைபெறும் சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.முத்தரசன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் தட்டுப்பாடு ஏற்படும் முன்னே மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.