உழைப்பவர் வியர்வை காய்வதற்குள் அவருக்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்" என உழைப்பை உயர்வாக மதிக்கக் கற்றுத்தந்தவர் நபிகள் நாயகம் - மிலாது நபியை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து
Oct 18 2021 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் எதிர்கொள்ளும் அத்தனை சூழல்களையும் சிறப்புற கடந்து வருவதற்கான போதனைகளை வழங்கியவர் நபி பெருமகனார் என்றும், "அம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று சொல்லி தாய்மைக்கும், பெண் இனத்திற்கும் பெரும் உயர்வு செய்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"உழைப்பவரின் வியர்வை காய்வதற்குள் அவருக்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்" என உழைப்பை உயர்வாக மதிக்கக் கற்றுத்தந்தவர் - "இறைவன் உங்கள் பக்கம் இருக்கும்போது எந்த சக்தியாலும் உங்களை எதுவும் செய்துவிட முடியாது" என்ற நபிகளாரின் நம்பிக்கையை என்றைக்கும் மனதில் கொள்வோம் - இறை தூதராக அவதரித்து, நம்பிய மக்களைக் காத்து நின்று, நல்லிணக்கத்தைப் போற்றி, மனிதகுலம் மாண்படைய எண்ணற்ற நல்ல சிந்தனைகளை போதித்த அண்ணல் நபிகளின் பிறந்தநாளில் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துவதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.