கரூரில் தாயும், மகளும் 72 மணி நேரம் கைகுலுக்கும் உலக சாதனை முயற்சி
Sep 23 2021 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புத்தக வாசிப்பு மற்றும் குடும்ப உறவின் அவசியத்தை வலியுறுத்தி, கரூரில் தாயும், மகளும் 72 மணி நேரம் தொடர்ந்து "கைகுலுக்கும்" உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கரூரில் உள்ள தனியார் அரங்கில், ஜவுளி தொழிலாளரான பத்மாவதியும், அவரது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்ரீதர்ஷினியும், இந்த சாதனை முயற்சியை முன்னெடுத்தனர். நேற்று தொடங்கிய இந்த சாதனை நிகழ்வு, நாளை நள்ளிரவு வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.