ரயில்வே பெண் காவலர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி : சென்னை ரயில்வே காவல்துறை தலைவர் கல்பனா நாயக் உறுதி
Sep 22 2021 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயிலில் கடத்தப்படும் சட்டவிரோத பொருள்களை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சென்னை ரயில்வே கோட்ட காவல்துறை தலைவர் திருமதி. கல்பனா நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை சென்னை ரயில்வே கோட்ட காவல்துறை தலைவர் திருமத.கல்பனா நாயக் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் காவலர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியமானது என்றும், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடைபெறும் சட்ட விரோதமான நடவடிக்கைகளை தடுப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.