நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் : திருச்சியில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
Sep 22 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, திருச்சியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்டெதஸ்கோப்பை தூக்கில் தொங்கவிட்டபடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு அளிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனவர்கள் கண்டன கோஷமிட்டனர். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்காவிட்டால், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஒன்று திரட்டி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.