ஊராட்சி ஒன்றியத் தேர்தல் - விருதுநகரில் அ.ம.மு.க வேட்பு மனு தாக்கல்
Sep 22 2021 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 12-வது ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.ம.மு.க சார்பில், மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. S. ஆறுமுகம் போட்டியிடுகிறார். மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.பயில்வான் K.S.சந்தோஷ்குமார் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் திரு. S. ஆறுமுகம் ஊர்வலமாக சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. மல்லிகாவிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் திரு. ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.