தென்காசி விவசாய பண்ணைக்குள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 12 அடி நீள ராஜநாகம்
Sep 22 2021 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி அருகே விவசாய பண்ணைக்குள் புகுந்த 12 அடி நீள ராஜநாகம் பாம்பினை வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். கடையம் வனசரக எல்லைக்குட்பட்ட கோவிந்தப்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பண்ணையில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி ராஜநாகம் பாம்பினை பிடித்தனர். பின்னர் அது கல்லாறு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.