சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Sep 22 2021 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை அருகே பாஜக பிரமுகரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை அருகே பெரியகாரையைச் சேர்ந்தவர் கதிரவன். பாஜக பிரமுகரான இவருக்கும், காவனவயலைச் சேர்ந்த பெரியசாமி, வீரபாண்டி ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கதிரவனை பெரியசாமி மற்றும் வீரபாண்டி ஆகியோர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.