பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு
Sep 22 2021 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் தேவசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயில் சிக்கிய பெண்களை மீட்க முயன்றனர். அதற்குள் கட்டடம் முழுவதும் தீ பரவியதால், அவர்களை மீட்க முடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டு இருவரது உடல்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.