பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் - சென்னை மாநகராட்சி
Sep 22 2021 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களில் இருந்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது 500 ரூபாயும், சாக்கடை மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்கள் மீது 100 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.