சமூகத்திற்காகப் பாடுபடுபவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் - நடிகர் ஆரி அர்ஜுனன்
Jul 24 2021 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதைவிட சமூகத்திற்காக பாடுபடக்கூடிய தன்னார்வலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது நல்ல சமூகத்துக்கான அடையாளமாக இருக்கும் என நடிகர் ஆரி அர்ஜுனன் தெரிவித்தார். கொரோனா காலகட்டத்தில் சேவை செய்த சென்னையை சேர்ந்த 235 தன்னார்வலர்களுக்கு கௌரவப்படுத்தும் விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆரி, கதாநாயகனாக மட்டுமல்லாமல், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆவலுடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.