சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
Jul 24 2021 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில், கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பொது கூட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், 30க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை அடுத்து மத ரீதியாக சர்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, திருமங்கலம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.