புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் துணிப்பையில் சுற்றப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
Jul 24 2021 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன, துணிப்பையில் சுற்றப்பட்டிருந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. பிலாவிடுதி கிராமப் பேருந்து நிறுத்தத்தில், துணிப்பையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், சிலர், இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், அக்குழந்தை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.