யுனைடெட் இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு - திருச்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Jul 24 2021 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
10 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து, திருச்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி யுனைடெட் இன்ஸ்சூரன்ஸ் அலுவலகம் முன்பு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர், கையில் பதாகைகளை ஏந்தியபடி, கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.